நாளை (06) முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை நாளாந்தம் 02 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென ஆணைக்குழு அறிவித்துள்ளது.
11 மற்றும் 12 ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கும் மின் விநியோகம் தடைப்படுமென இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது