இந்தியாவில் இருந்து யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்கு இந்திய ஏற்றுமதி – இறக்குமதி வங்கி (Exim Bank) யில் இருந்து 55 மில்லியன் டொலர்களை கடனாக பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2022/2023 பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரத்தை பெற்றுக்கொள்வதற்காக இந்திய அரசு உடன்பாடு தெரிவித்திருந்தது. குறித்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது..